Loading......

Prominent Wellwishers


SHRI.M.B NIRMAL

Founder Exnora International,

Date : 22.02.2010.

எக்ஸ்னோரா அமைப்பின் அன்பான வணக்கம்.

அடையார் எக்ஸ்னோரா பெண்கள் பிரிவால் தொடங்கப்பட்ட "தர்ஷினி" கடந்த பத்து ஆண்டுகளாக பார்வையற்றவர்களுக்கு சிறந்த தொண்டாற்றி வருவது பாராட்டுக்குரியது. 250க்கும் மேற்பட்ட பார்வையற்ற இளைஞர்கள் "தர்ஷினி" தொண்டர்கள் தொண்டால் தங்கள் பாடங்களைப் படிக்க முடிந்தது. மேலும் "தர்ஷினி" தொண்டர்கள் ஏராளமான பார்வையற்றவர்களுக்காக தேர்வு எழுதி பார்வையற்றவர்கள் கல்லுரித் தேர்வுகளில் வெற்றியடைய பேருதவி புரிந்துள்ளார்கள்.

பார்வையற்றவர்களுக்கு ஏறக்குறைய எழுபத்தைந்து "தர்ஷினி" அமைப்பின் உறுப்பினர்கள் அருந்தொண்டாற்றி வருகிறார்கள். இன்று பார்வையற்ற இளைஞர்கள் பலர் பட்டதாரிகளாகிவிட்டனர். பலருக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. பார்வையற்றவர்கள் வாழ்வில் ஒளி கிடைத்துள்ளது. இப்பெருமையின் கணிசமான பங்கு தர்ஷினியின் தலைமைக்கும் மற்றும் தொண்டர்களுக்குமே உரியது. இவர்கள் தொடர்ந்து சேவையாற்றிட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்."

- ம.பா. நிர்மல்.

Back To Top